கனடா நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படும் தாய்லாந்து சரக்குக் கப்பலான எம்.பி.சன் .சீ இல் பயணிக்கின்ற ஈழத் தமிழர்களின் உரிமைகளை கனேடிய அரசு மதித்து நடக்க வேண்டும் என்று கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான அமைப்புக்கள் மூன்று கூட்டாகக் கோரி உள்ளன. அகதிகளுக்கான கனேடிய பேரவை, கனேடிய தமிழர் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபையின் கனேடிய கிளை ஆகியனவே இவ்வாறு கோரி உள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இத்தமிழர்களைக் கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற இவர்களுக்கு கனடா பாதுகாவலராக மாற வேண்டும் என்றும் இத்தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் இறைஞ்சி உள்ளன. இத்தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று இக்கூட்டு அறிக்கையில் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
ReplyDeleteஉங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!