இன்றைய நவீன உலகிலே விஞ்ஞானம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கேற்றாற் போல விதம் விதமான நோய்களும் பல்வேறு பெயர்களில் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள், வறியநாடுகள் என்ற பேதமில்லாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பன இந்த நோய்கள்தான்.
எல்லா நாடுகளுமே தமது மக்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கென ஆண்டுதோறும் பெருந்தொகைப் பணத்தை ஒதுக்குகின்றன. ஏராளமான மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன. புதுவகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் வித்தியாசமான பெயர்களில் நோய்களும் தோற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.சித்த, ஆயுள்வேத மருந்துருகளின் பாவனை புறமொதுக்கப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பாவனையால் பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதைவிட தரமற்ற மருந்துகளின் பாதிப்பு வேறு. இதனால் மருந்துகளின்றி நோய்களைக் குணமாக்க முடியாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு மெல்லிய ஒளிக்கீற்றாக ஒரு விடையும் கிடைத்துள்ளது. அதுதான், இசை மருத்துவம். ஆனால் இது எமக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தவே செய்யும். அதற்கு வலுவான காரணமும் உண்டு. இந்த இசை மருத்துவம் பற்றிய செய்தி எமது நாட்டிலே எப்போதுமே கேட்டிராத ஒன்று. ஆனால் நோர்வே நாட்டில் தோன்றிய இந்த மருத்துவ முறையானது ஏனைய ஸ்கன்டிநேவியநாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா எனப் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் வியாபித்து வருகின்றது. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, வலிதரும் ஊசி இல்லை, நோய்க்குரிய மருத்துவ இசையைக் கேட்டாலே போதும் நோய் பயந்தோடிவிடும். இந்த ஆச்சரியம் தரும் மருத்துவ முறையை இந்த நாட்டிலே முதன் முதலாக அறிமுகம் செய்த பெருமையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பெறுகின்றது.
இந்த வைத்தியமுறையை வழங்குவதற்கு இந்த நாட்டிலேயே தகுதி பெற்ற ஒருவர் என்ற பெருமையையும் இந்த யாழ்.மண்ணின் மைந்தர் ஒருவரே பெறுகின்றார். அவர் வேறு யாருமல்லர். இசைத்துறையிலே பல உயரிய பட்டங்களைப் பெற்றுள்ள 34 வயதேயான டாக்டர் சிறீரங்கநாதன் தர்ஷனன் தான் அவர். உதயன் பத்திரிகையின் சார்பில் அவரைச் செவ்வி கண்டபோது இசை மருத்துவம் பற்றி இதுவரை தெரிந்திராத பல அரிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. டாக்டர் சிறீ ரங்கநாதன் தர்ஷனன் தமது சொந்த வாழ்க்கை வரலாறு குறித்தும் எமக்கெல்லாம் புதியதொரு விடயமான குரலிசை மூலமான வைத்தியமுறை குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தரப்பட்டுகின்றன. நான் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அப்பா சிறீரங்கநாதன். அம்மா செல்வகௌரி. எனது ஆரம்பக் கல்வியைக் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி ஆகியவற்றிலும் பயின்றேன். நான் யாழ். இந்துக்கல்லூரியில் ஜி.சீ.ஈ உயர்தரத்தில் உயிரியல் பாடப்பிரிவில்தான் முதலில் கற்று வந்தேன். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு இசையின் மீது அடங்காத ஆர்வம் இருந்ததால், உயிரியல் பிரிவிலிருந்து கலைப் பிரிவுக்கு மாறி எனது கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் பயின்று முடித்தேன். நான் ஒரு மருத்துவராக வேண்டுமென விரும்பிய எனது பெற்றோரும், உறவினர்களும் எனது இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் நான் எனது முடிவை மாற்றவில்லை. இப்போது எனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஒத்தவாறு ஒரு மருத்துவராகவும் நான் தற்போது ஏற்றம் பெற்றிருப்பது எனது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
அளவெட்டியூர் சிற்றம்பலம் சிவஞானராஜா அவர்களிடம் குருகுலவாசம் செய்து இசையைப் பயின்றேன். அவரும் நான் இசைத் துறையில் தடம் பதிக்கச் சிறப்பான பயிற்சிகளை எனக்கு வழங்கினார். அவரை எனது நெஞ்சம் எப்போதுமே மறக்காது.பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து இசையில் B.Music முதல் வகுப்பில் பட்டம் பெற்றேன். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலே M.Music முதல் வகுப்பிலும் M.Phil Music முதல் வகுப்பு சிறப்பு நிலைத் தேர்ச்சியும் பெற்றேன். இறுதியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலே எனது டாக்டர் பட்டமான PhD Music இணைப் பெற்றேன். பின்னர் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து இசைத்துறையில் B.Music பட்டத்தினைப் பெற்றேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் M. Music, M.Phil Music ஆகிய பட்டங்களை முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றேன்.
இதன் பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் (Ph.D) பெறும் பொருட்டு இணைந்து எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன். நான் ஒரு மருத்துவராக உருவாக வேண்டுமென்ற எனது பெற்றோரின் கனவை நனவாக்கும் பொருட்டு எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற தொலைநோக்குடன் “குரலிசையின் மருத்துவக் குணங்கள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்தேன். இதற்குக் குரலிசை மூலம் நோய்களுக்கு மருத்துவம் செய்யலாம் என்ற எனது அசையாத நம்பிக்கை ஒரு காரணமாகும். எனது ஆராய்ச்சிகளுக்கான வசதிகள் இந்தியாவில் போதியளவு இல்லாமையினால் இங்கிலாந்து சென்று அதனைத் தொடர்ந்தேன். அங்குM.Phil, Ph.D பட்டப்படிப்பை நான் ஆங்கில மொழியில் தொடர்ந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. வேற்றுமொழி பேசுவோர் இசை மருத்துவத்தைக் கற்பதற்கு எம்மை நாடிவரும் போது அதற்கு ஆங்கில மொழி பேருதவியாக இருக்குமென நான் நம்பியதே இதற்கு முக்கிய காரணமாகும். ஏனென்றால் இந்த மருத்துவ முறைபற்றிக் கேள்விப்படும் தென்னிலங்கை மக்களும், வேறு நாட்டு மக்களும் எம்மை நிச்சயம் நாடி வருவர். மேலும் நான் 1999 இல் யாழ். பல்கலைக் கழக நுண்கலைப் பீடத்தின் குரலிசை உதவி விரிவுரையாளராக இணைந்து இன்று முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதற்கு மேலதிகமாக யாழ். போதனா வைத்தியசாலையில் வாரத்தில் இரு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) பி.ப.2 மணி தொடக்கம் 4 மணிவரை மனநல மருத்துவப் பிரிவில் வைத்தியராக சென்ற மாதம் தொடக்கம் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதற்கான அனுமதியை யாழ்.வைத்தியசாலை மனநல மருத்துவப் பிரிவின் வைத்திய நிபுணர் டாக்டர் சிவயோகன் யாழ்.பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொடுத்தார். அவர் எனக்கு வேண்டிய ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்கி வருகின்றார்.
உளவளம்
பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதற்கு அல்லது இந்த நோய் வராமல் தடுப்பதற்கு இசை உதவும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. உளநலம்
பாதிப்படைந்தவர்களையும், உளநோய்க்கு ஆளானவர்களையும் தனித் தனியாகத் தேர்ந்தெடுத்து பொருத்தமான இசையினைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தலாம் அல்லது ஒருவருக்கு இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
நான் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். எல்லா இசையும் மருத்துவ இசையல்ல. மருத்துவ இசையானது ஆளுக்கு ஆள், சமுதாயத்திற்குச் சமுதாயம், நாட்டுக்கு நாடு, சூழல், மதம், தொழில், மொழி, கல்வியறிவு, ஆண் பெண் வித்தியாசம் என வேறுபடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மருத்துவ இசையைத் தயாரித்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு வைத்தியர் எப்படி நோயாளியொருவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தபின் வைத்தியத்தை ஆரம்பிக்கின்றாரோ, அதேபோன்று இசை மருத்து வரும் ஒரு நோயாளி யின் முழு வாழ்க்கைக் குறிப்பையும் நுட்பமான முறையில் பதிவு செய்து சகல விவரங்களையும் சேகரித்துக் கொண்ட பின்னரே ஒவ்வொருவருக்கும் ஏற்ற முறையில் தனித்தனியான மருத்துவ இசையைத் தயாரிக்கின்றார். இதன் பின்னர் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட ஒலிப்பதிவு செய்யப்பட்ட மருத்துவ இசை வழங்கப்படும். இதனை ஏனைய வைத்தியர்கள் வழங்கும் மருந்து வகைகளை வேளைக்கு வேளை அருந்துவது போல நோயாளர்கள் கேட்க வேண்டும். இதனை ஒழுங்காக வைத்தியர் குறிப்பிடும் காலம்வரை கடைப்பிடிப்பதன் மூலம் நோயினின்றும் குணமடையலாம்.
மேலும் இந்த இசை மருத்துவம் பக்கவிளைவுகள் ஏதும் விளைவிக்காததோடு, செலவு குறைவானதாகவும், இலகுவானதாகவும் இருப்பதுடன், உலகின் எந்த மூலையில் உள்ள எவருக்கும் இணையதள மூலமாகச் சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ள சிறப்பினைப் பெற்றுள்ளது.
செவ்வி:
ராஜராஜன்
(வளரும்)
நன்றி: உதயன் பத்திரிகை
Thursday, August 26, 2010
Thursday, July 29, 2010
தமிழர்களின் உரிமைகளை கனேடிய அரசு மதித்து நடக்க வேண்டும்
கனடா நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படும் தாய்லாந்து சரக்குக் கப்பலான எம்.பி.சன் .சீ இல் பயணிக்கின்ற ஈழத் தமிழர்களின் உரிமைகளை கனேடிய அரசு மதித்து நடக்க வேண்டும் என்று கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான அமைப்புக்கள் மூன்று கூட்டாகக் கோரி உள்ளன. அகதிகளுக்கான கனேடிய பேரவை, கனேடிய தமிழர் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபையின் கனேடிய கிளை ஆகியனவே இவ்வாறு கோரி உள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இத்தமிழர்களைக் கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற இவர்களுக்கு கனடா பாதுகாவலராக மாற வேண்டும் என்றும் இத்தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் இறைஞ்சி உள்ளன. இத்தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று இக்கூட்டு அறிக்கையில் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இத்தமிழர்களைக் கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற இவர்களுக்கு கனடா பாதுகாவலராக மாற வேண்டும் என்றும் இத்தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் இறைஞ்சி உள்ளன. இத்தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று இக்கூட்டு அறிக்கையில் பூடகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
காயங்களும் வலிகளும் நிறைந்து சிதைந்திருக்கிற கிராமம்!
செல்வாநகர் கிராமத்தைப் பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். வறுமையும் காயங்களும் மிக்க அந்த கிராமத்தின் ஊடாக ஒரு முறை யுத்தம் நடைபெறும் பொழுது ஓடிக்கொண்டிருந்த ஞாபகமும் எனக்கு வருகிறது.
இப்பொழுது யுத்த காலத்தின் தாக்குதல்களுக்கு உள்ளான அந்த கிராமமும் மக்களும் துயர் தரும் வாழ்விலிருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றனர். இப்படிக் குறிப்பிடும் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் போரில் ஊனமடைந்தவர்கள் உட்பட அந்த கிராமத்து மக்கள் சிலரையும் அண்மையில் சந்தித்த பிறகு இந்த விபரணக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
ஊனமடைந்தவர்களின் குடியிருப்பு என்று அந்தக் குடியிருப்பை சுட்டும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அப்படித்தான் அந்த மக்களை எல்லோருமே அழைக்கிறார்கள்.
போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஒரு குடியிருப்பாக ஒரிடத்தில் இணைந்து வாழ்கிறார்கள். அவர்களை போர் மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறது. யுத்தம் தீவிரமாக நடைபெற்றன என்பதை சொல்லும் மண்மேடுகள் இன்னும் சனங்களின் காணிகளை ஊடறுத்துச் செல்கின்றன.
செல்வாநகர் கிராமத்தைப் பற்றி சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். குறிப்பாக சிறிய வயதில் அந்த கிராமங்களின் ஊடாக குறுக்கு வழியாக பாவிக்கும் வீதிகளால் பயணங்களை பல தடவை மேற்கொண்டிருக்கிறேன்.
பற்றைகளும் கிடுகு கொட்டில்களும் என்றுதான் கண்ணுக்கு தெரிந்திருக்கின்றன. ஒருமுறை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அந்த கிராமத்தின் ஊடாக ஒரு குறுக்கு வழியாக எதிரிகளின் கண்களில் பிடிபடாதபடி ஓடிய ஞாபகமும் அந்தத் தெருக்களை பார்க்க எனக்கு மீள வந்து கொண்டிருந்தது.
எதிரி பதுங்கியிருக்கும் முடக்குகளோ! என்ற அச்சம் மனதில் குவிந்தன. இப்பொழுது இடுகாடுகளைப்போல யாருமற்ற காணிகளும் யுத்த காலத்தின் மண்மேடுகளும் பதுங்குகுழிகளும் மிதிவெடி அபாயங்களும்தான் பரவிக் கிடக்கின்றன.
யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக பெற்றோர்களுடன் தடுப்பில் இருந்த குழந்தைகளும் அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். அந்த கிராமத்தில் முதல் முதலில் நான் வனசுதன் அன்னலட்சுமி என்பவரை சந்தித்தேன். மட்டக்களப்பை சேர்ந்த அன்னலட்சுமி முன்னாள் போராளியாக இருந்தவர்.
ஆனால் படுகாயமடைந்து ஊனமுற்றதால் போராட்டத்தில் இருந்து 90களில் விலகி குடும்ப வாழ்க்கையை அமைத்த அவரும் அவரது கணவரும் அவரது நான்கு வயதான வேழினியும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பில் இருந்த பொழுது வனசுதன் இறந்து போயிருக்கிறார்.
கண்களில் எறிகணைத்துண்டு கிடப்பதினால் வீங்கியிருக்கும் அந்தப் பகுதியை காட்டியபடி தனக்கு உடலில் பல இடங்களில் எறிகணைத்துண்டுகள் இருப்பதாக குறிப்பிட்டார். தற்பொழுது ஒரு காலும் கையும் இயங்குவதில் சிரமங்களை தருவதாகவும் தலை எப்பொழுதும் வலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்தான் மாற்று வலுவுள்ள அந்த குடியிருப்பிற்கான தலைவியாக செயற்படுகிறார்.
வீடமைப்பதற்காக தரப்பட்ட 5000 ரூபாவில் சில கோழிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அன்னலட்சுமியின் குழந்தை வேழினி தான் பம்பமடு போராளித் தடுப்பு முகாமில் தாயாருடன் தடுக்கப்பட்டிருந்தாக தெளிவாக குறிப்பிடுகிறார். 607 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் இதுவரையில் நான்கு தடவைகளாக மக்கள் மீள குடியிருத்தப்பட்டிருக்கிறார்கள். சில மக்களுக்கு இன்னமும் தகரங்களும் தரப்பாலும் கிடைக்கவில்லை என்று அந்த கிராமத்தின் தலைவர் சு. சுதாகரன் என்னிடம் குறிப்பிட்டார். செல்வாநகர் அ.த.க பாடசாலை என்ற அந்த கிராமத்திற்குரிய பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புக்கள் நடக்கின்றன.
அந்த பாடசாலையில் இருந்த தற்காலிக வகுப்பறைகள் இரண்டு அழிந்து விட்டன. அழிந்த வகுப்பறைக்கு மேலால் தரப்பாலை இழுத்துக் கட்டிக் கொண்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கும் ஒரே ஒரு நிரந்தர கட்டிடத்தில் 270 மாணவர்களுக்குரிய வகுப்புக்களை நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டில் புறப்பட்ட கணவன் ஜேர்மனியில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உதயகுமரர் தபோநிதி குறிப்பிட்டார்.
43 வயதான இந்த தாயார் இரண்டு கண்களும் பிறப்பிலே பார்வை இழந்தவர். இவரது தங்கையும் ஊனமடைந்தவர். தனது ஒரே பிள்ளையை கல்வி கற்க வைப்பதற்காக மிகுந்த கஷ்டப்படுவதாக அவர் சொன்னார். கால்கள் ஊனமடைந்த மகனின் சைக்கிள் கடையை நம்பி வாழும் பராசக்தியின் குடும்பத்தில் பல துயரங்கள் காணப்படுகின்றன.
ஓமந்தையில் படைகளின் சோதனை நடவடிக்கையின் பொழுது மகன் ஒருவர் காணாமல் போனதாக குறிப்பிடும் பராசக்தி அவனை இராணுவத்தினர் எங்கு கொண்டு போனார்கள்? எனன் செய்தார்கள்? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டபடி தடுப்புமுகாமில் நேரிட்ட கொடுமை தனது கணவரையும் கொன்று விட்டதாக சொன்னார்.
தனது மகளின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லும் அவர் இயக்கச்சியிலிருந்து சூரியக் கதிர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்தது முதல் பல இழப்புக்களை சந்தித்ததாக குறிப்பிடுகிறார். கால் ஊனமடைந்த அவரது மகன் பக்கத்தில் சிறியளவிலாக சைக்கிள் கடை ஒன்றை போட்டுக் கொண்டு இருந்தார்.
பொக்கணையில் நடந்த எறிகணை வீச்சில் கணவரை இழந்த முருகன் புனவேஸ்வரி 1980இல் இனக்கலவரம் காரணமாக மலையக்கதி்லிருந்து தனது தாய் தந்தையர் இடம்பெயர்ந்து வந்ததாக குறிப்பிட்டார். 30 வயதை உடைய அந்த இளம் தாயிற்கு எட்டு வயதான குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்த வயதில் என்ன செய்வது? தனது குழந்தை எப்படி வளர்ப்பது? என்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டார். பிறப்பிலேயே கால் இவருக்கு பாதிக்கப்பட்டு விட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த காலத்தில் தவறுதலாக காயப்பட்ட பொழுது கால் இயங்காமல் இழுத்து விட்டதா குறிப்பிடும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவகுமார் அதற்காக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரத்தின் கூரையில்லாத சிதைந்த கட்டிடம் ஒன்றிற்குள் இருந்து வாகன இருக்கைகளிற்கான உறைகளை தைத்துக் கொண்டிருந்தார் இராசேந்திரன் புவனேஸ்வரன். வீட்டின் நிலமைகளை பார்க்க பொறுக்காமல் நண்பர்கள் கொடுத்த பழைய தையல் இயந்திரத்தை வைத்து மீண்டும் தனது கணவர் வேலையை தொடங்கியிருப்பதாக லலிதாதேவி குறிப்பிட்டார்.
அந்தப் பழைய இயந்திரம் சிலவேளை பழுதுபடும் பொழுது தானே அதை திருத்தி திருத்தி தைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடும் புவனேஸ்வரன் யுத்தம் காரணமாக தனது வலது காலை இழந்த நிலையில்தான் தைத்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரியளவில் தான் உழைத்து அமைத்த பழைய தையல்கடை குறித்து ஞாபகப்படுத்திய பொழுது அந்த கடை உட்பட எல்லாவற்றையும் தான் இழந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அவரது பொய்க்காலும் சேர்ந்து தைத்துக் கொண்டிருக்க அவரது துயர நிலையை மீறி புன்னகை நம்பிக்கை தரும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படி வலிகளுடன் வாழும் அந்த அந்த மக்களின் குடியிருப்பில் சோபா என்ற தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் ஒன்றிலும் கூரையில்லை. ஒரு கூரையில்லாத கிராமத்தை போல வெயிலில் மக்கள் நனைந்து கொண்டிருக்க எங்கள் வீடுகளுக்கு யாராவது கூரை போட்டுத் தருவார்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த மக்கள்.
1995இல் சூரியகதிர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களிடம் இருந்த எல்லாவற்றையும் வன்னி இறுதி யுத்தம் பறித்து விட்டது. மாடசாமி அம்சவள்ளி என்ற பெற்றோர் இருபது வயதான தங்கள் மகளை காயமடைந்த பொழுது மாத்தளனில் வைத்து இராணுவத்தினரிடம் காப்பாற்றித் தரும்படி கொடுத்தாகவும் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
அவளை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தாங்கள் அலையாத இடமில்லை என்றும் அதனால் பைத்தியமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். மகள் காயமடைந்த இடத்திலேயே தங்கள் மகன் ஒருவர் இறந்து போனதாகவும் ஏற்கனவே ஒரு மகன் போராடத்தில் வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.
எங்கள் மகள் எங்களுக்கு வேணும் என்று கடுமையாக கோரும் அந்தப் பெற்றோர்கள் தங்கள் இன்னமும் காணியை திருத்தவில்லை என்றும் தங்கள் கூடாரத்திற்கு பாம்புகள் நுழைந்து தம்மை கடித்து கொல்லட்டும் என்றபடிதான் வாழுகிறேன் என் மனதை தகர்க்கும் விதமாக சொல்லி அழுதார்கள். மண்மேடுகளுக்குள்ளாலும் சனங்களற்ற காணிகளுக்குள்ளாலும் செல்லும் பொழுது கூடார முற்றத்தின் முன்பாக உடல் முழுவதும் காயமடைந்த இளம் தாய் கிடந்து கத்திக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரது குழந்தை ஏங்கியபடி நின்றது. முப்பது வயதான அந்தப் பெண் பதுங்குழிக்குள் குடும்பத்துடன் இருந்த பொழுது எறிகணை வந்து விழந்ததில் தங்கம்மா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சதானந்தனுடன் தங்கம்மாவின் சகோதரர் மற்றும் இரண்டு குழந்தைகளும் பலியாகி விட்டார்கள். தலை கொதிக்கிறது என்றும் வாந்தி வருகிறது என்றும் முற்றத்தில் கிடந்து அவர் கத்திக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் அந்த கிராமத்திலிருந்து அன்று விடைபெற்றேன். தங்கம்மாவை பார்த்துக் கொண்டு எனது பிள்ளையை எப்படியாவது திருத்த வேண்டும். இந்த பிள்ளை சுமக்கும் எறிகணைத்துண்டுகளை எப்படியாவது வெளியில் எடுக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவைப்போல நிறைய மக்கள் உடலாலும் மனதாலும் காயங்களுடன் பாகங்களாகவும் முழுமையாகவும் கழற்றித் திருத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் செல்வாநகர் கிராமம் காயங்களாலும் நீண்டகால மற்றும் யுத்தம் ஏற்படுத்திய வறுமையாலும் மெலிந்து போயிருக்கிறது.
யுத்தத்தினால் அதிகம் சிதைந்து போயிருக்கிறது. இந்தக் கிராமத்தின்மீது அதிகம் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும். போரால் இழப்புக்களுக்கு முகம் கொடுத்த இந்த மக்கள் மீள் வாழ்க்கைக்கு செல்ல வழிகளை ஏற்படுத்த வேண்டிய பெரும் அவசியம் நமக்கு இருக்கிறது.
நன்றி :- குளோபல் தமிழ் செய்தி
இப்பொழுது யுத்த காலத்தின் தாக்குதல்களுக்கு உள்ளான அந்த கிராமமும் மக்களும் துயர் தரும் வாழ்விலிருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றனர். இப்படிக் குறிப்பிடும் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் போரில் ஊனமடைந்தவர்கள் உட்பட அந்த கிராமத்து மக்கள் சிலரையும் அண்மையில் சந்தித்த பிறகு இந்த விபரணக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
ஊனமடைந்தவர்களின் குடியிருப்பு என்று அந்தக் குடியிருப்பை சுட்டும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அப்படித்தான் அந்த மக்களை எல்லோருமே அழைக்கிறார்கள்.
போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஒரு குடியிருப்பாக ஒரிடத்தில் இணைந்து வாழ்கிறார்கள். அவர்களை போர் மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறது. யுத்தம் தீவிரமாக நடைபெற்றன என்பதை சொல்லும் மண்மேடுகள் இன்னும் சனங்களின் காணிகளை ஊடறுத்துச் செல்கின்றன.
செல்வாநகர் கிராமத்தைப் பற்றி சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்திருக்கிறேன். குறிப்பாக சிறிய வயதில் அந்த கிராமங்களின் ஊடாக குறுக்கு வழியாக பாவிக்கும் வீதிகளால் பயணங்களை பல தடவை மேற்கொண்டிருக்கிறேன்.
பற்றைகளும் கிடுகு கொட்டில்களும் என்றுதான் கண்ணுக்கு தெரிந்திருக்கின்றன. ஒருமுறை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அந்த கிராமத்தின் ஊடாக ஒரு குறுக்கு வழியாக எதிரிகளின் கண்களில் பிடிபடாதபடி ஓடிய ஞாபகமும் அந்தத் தெருக்களை பார்க்க எனக்கு மீள வந்து கொண்டிருந்தது.
எதிரி பதுங்கியிருக்கும் முடக்குகளோ! என்ற அச்சம் மனதில் குவிந்தன. இப்பொழுது இடுகாடுகளைப்போல யாருமற்ற காணிகளும் யுத்த காலத்தின் மண்மேடுகளும் பதுங்குகுழிகளும் மிதிவெடி அபாயங்களும்தான் பரவிக் கிடக்கின்றன.
யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டதன் காரணமாக பெற்றோர்களுடன் தடுப்பில் இருந்த குழந்தைகளும் அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள். அந்த கிராமத்தில் முதல் முதலில் நான் வனசுதன் அன்னலட்சுமி என்பவரை சந்தித்தேன். மட்டக்களப்பை சேர்ந்த அன்னலட்சுமி முன்னாள் போராளியாக இருந்தவர்.
ஆனால் படுகாயமடைந்து ஊனமுற்றதால் போராட்டத்தில் இருந்து 90களில் விலகி குடும்ப வாழ்க்கையை அமைத்த அவரும் அவரது கணவரும் அவரது நான்கு வயதான வேழினியும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்பில் இருந்த பொழுது வனசுதன் இறந்து போயிருக்கிறார்.
கண்களில் எறிகணைத்துண்டு கிடப்பதினால் வீங்கியிருக்கும் அந்தப் பகுதியை காட்டியபடி தனக்கு உடலில் பல இடங்களில் எறிகணைத்துண்டுகள் இருப்பதாக குறிப்பிட்டார். தற்பொழுது ஒரு காலும் கையும் இயங்குவதில் சிரமங்களை தருவதாகவும் தலை எப்பொழுதும் வலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்தான் மாற்று வலுவுள்ள அந்த குடியிருப்பிற்கான தலைவியாக செயற்படுகிறார்.
வீடமைப்பதற்காக தரப்பட்ட 5000 ரூபாவில் சில கோழிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அன்னலட்சுமியின் குழந்தை வேழினி தான் பம்பமடு போராளித் தடுப்பு முகாமில் தாயாருடன் தடுக்கப்பட்டிருந்தாக தெளிவாக குறிப்பிடுகிறார். 607 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் இதுவரையில் நான்கு தடவைகளாக மக்கள் மீள குடியிருத்தப்பட்டிருக்கிறார்கள். சில மக்களுக்கு இன்னமும் தகரங்களும் தரப்பாலும் கிடைக்கவில்லை என்று அந்த கிராமத்தின் தலைவர் சு. சுதாகரன் என்னிடம் குறிப்பிட்டார். செல்வாநகர் அ.த.க பாடசாலை என்ற அந்த கிராமத்திற்குரிய பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புக்கள் நடக்கின்றன.
அந்த பாடசாலையில் இருந்த தற்காலிக வகுப்பறைகள் இரண்டு அழிந்து விட்டன. அழிந்த வகுப்பறைக்கு மேலால் தரப்பாலை இழுத்துக் கட்டிக் கொண்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கும் ஒரே ஒரு நிரந்தர கட்டிடத்தில் 270 மாணவர்களுக்குரிய வகுப்புக்களை நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டில் புறப்பட்ட கணவன் ஜேர்மனியில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உதயகுமரர் தபோநிதி குறிப்பிட்டார்.
43 வயதான இந்த தாயார் இரண்டு கண்களும் பிறப்பிலே பார்வை இழந்தவர். இவரது தங்கையும் ஊனமடைந்தவர். தனது ஒரே பிள்ளையை கல்வி கற்க வைப்பதற்காக மிகுந்த கஷ்டப்படுவதாக அவர் சொன்னார். கால்கள் ஊனமடைந்த மகனின் சைக்கிள் கடையை நம்பி வாழும் பராசக்தியின் குடும்பத்தில் பல துயரங்கள் காணப்படுகின்றன.
ஓமந்தையில் படைகளின் சோதனை நடவடிக்கையின் பொழுது மகன் ஒருவர் காணாமல் போனதாக குறிப்பிடும் பராசக்தி அவனை இராணுவத்தினர் எங்கு கொண்டு போனார்கள்? எனன் செய்தார்கள்? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டபடி தடுப்புமுகாமில் நேரிட்ட கொடுமை தனது கணவரையும் கொன்று விட்டதாக சொன்னார்.
தனது மகளின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லும் அவர் இயக்கச்சியிலிருந்து சூரியக் கதிர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்தது முதல் பல இழப்புக்களை சந்தித்ததாக குறிப்பிடுகிறார். கால் ஊனமடைந்த அவரது மகன் பக்கத்தில் சிறியளவிலாக சைக்கிள் கடை ஒன்றை போட்டுக் கொண்டு இருந்தார்.
பொக்கணையில் நடந்த எறிகணை வீச்சில் கணவரை இழந்த முருகன் புனவேஸ்வரி 1980இல் இனக்கலவரம் காரணமாக மலையக்கதி்லிருந்து தனது தாய் தந்தையர் இடம்பெயர்ந்து வந்ததாக குறிப்பிட்டார். 30 வயதை உடைய அந்த இளம் தாயிற்கு எட்டு வயதான குழந்தை ஒன்று இருக்கிறது.
இந்த வயதில் என்ன செய்வது? தனது குழந்தை எப்படி வளர்ப்பது? என்றும் அநாதரவாக்கப்பட்டுள்ளதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டார். பிறப்பிலேயே கால் இவருக்கு பாதிக்கப்பட்டு விட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த காலத்தில் தவறுதலாக காயப்பட்ட பொழுது கால் இயங்காமல் இழுத்து விட்டதா குறிப்பிடும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவகுமார் அதற்காக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரத்தின் கூரையில்லாத சிதைந்த கட்டிடம் ஒன்றிற்குள் இருந்து வாகன இருக்கைகளிற்கான உறைகளை தைத்துக் கொண்டிருந்தார் இராசேந்திரன் புவனேஸ்வரன். வீட்டின் நிலமைகளை பார்க்க பொறுக்காமல் நண்பர்கள் கொடுத்த பழைய தையல் இயந்திரத்தை வைத்து மீண்டும் தனது கணவர் வேலையை தொடங்கியிருப்பதாக லலிதாதேவி குறிப்பிட்டார்.
அந்தப் பழைய இயந்திரம் சிலவேளை பழுதுபடும் பொழுது தானே அதை திருத்தி திருத்தி தைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடும் புவனேஸ்வரன் யுத்தம் காரணமாக தனது வலது காலை இழந்த நிலையில்தான் தைத்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரியளவில் தான் உழைத்து அமைத்த பழைய தையல்கடை குறித்து ஞாபகப்படுத்திய பொழுது அந்த கடை உட்பட எல்லாவற்றையும் தான் இழந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அவரது பொய்க்காலும் சேர்ந்து தைத்துக் கொண்டிருக்க அவரது துயர நிலையை மீறி புன்னகை நம்பிக்கை தரும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படி வலிகளுடன் வாழும் அந்த அந்த மக்களின் குடியிருப்பில் சோபா என்ற தொண்டு நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் ஒன்றிலும் கூரையில்லை. ஒரு கூரையில்லாத கிராமத்தை போல வெயிலில் மக்கள் நனைந்து கொண்டிருக்க எங்கள் வீடுகளுக்கு யாராவது கூரை போட்டுத் தருவார்களா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த மக்கள்.
1995இல் சூரியகதிர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களிடம் இருந்த எல்லாவற்றையும் வன்னி இறுதி யுத்தம் பறித்து விட்டது. மாடசாமி அம்சவள்ளி என்ற பெற்றோர் இருபது வயதான தங்கள் மகளை காயமடைந்த பொழுது மாத்தளனில் வைத்து இராணுவத்தினரிடம் காப்பாற்றித் தரும்படி கொடுத்தாகவும் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள்.
அவளை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று தாங்கள் அலையாத இடமில்லை என்றும் அதனால் பைத்தியமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். மகள் காயமடைந்த இடத்திலேயே தங்கள் மகன் ஒருவர் இறந்து போனதாகவும் ஏற்கனவே ஒரு மகன் போராடத்தில் வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.
எங்கள் மகள் எங்களுக்கு வேணும் என்று கடுமையாக கோரும் அந்தப் பெற்றோர்கள் தங்கள் இன்னமும் காணியை திருத்தவில்லை என்றும் தங்கள் கூடாரத்திற்கு பாம்புகள் நுழைந்து தம்மை கடித்து கொல்லட்டும் என்றபடிதான் வாழுகிறேன் என் மனதை தகர்க்கும் விதமாக சொல்லி அழுதார்கள். மண்மேடுகளுக்குள்ளாலும் சனங்களற்ற காணிகளுக்குள்ளாலும் செல்லும் பொழுது கூடார முற்றத்தின் முன்பாக உடல் முழுவதும் காயமடைந்த இளம் தாய் கிடந்து கத்திக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரது குழந்தை ஏங்கியபடி நின்றது. முப்பது வயதான அந்தப் பெண் பதுங்குழிக்குள் குடும்பத்துடன் இருந்த பொழுது எறிகணை வந்து விழந்ததில் தங்கம்மா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சதானந்தனுடன் தங்கம்மாவின் சகோதரர் மற்றும் இரண்டு குழந்தைகளும் பலியாகி விட்டார்கள். தலை கொதிக்கிறது என்றும் வாந்தி வருகிறது என்றும் முற்றத்தில் கிடந்து அவர் கத்திக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் அந்த கிராமத்திலிருந்து அன்று விடைபெற்றேன். தங்கம்மாவை பார்த்துக் கொண்டு எனது பிள்ளையை எப்படியாவது திருத்த வேண்டும். இந்த பிள்ளை சுமக்கும் எறிகணைத்துண்டுகளை எப்படியாவது வெளியில் எடுக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தங்கம்மாவைப்போல நிறைய மக்கள் உடலாலும் மனதாலும் காயங்களுடன் பாகங்களாகவும் முழுமையாகவும் கழற்றித் திருத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் செல்வாநகர் கிராமம் காயங்களாலும் நீண்டகால மற்றும் யுத்தம் ஏற்படுத்திய வறுமையாலும் மெலிந்து போயிருக்கிறது.
யுத்தத்தினால் அதிகம் சிதைந்து போயிருக்கிறது. இந்தக் கிராமத்தின்மீது அதிகம் அதிகம் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும். போரால் இழப்புக்களுக்கு முகம் கொடுத்த இந்த மக்கள் மீள் வாழ்க்கைக்கு செல்ல வழிகளை ஏற்படுத்த வேண்டிய பெரும் அவசியம் நமக்கு இருக்கிறது.
நன்றி :- குளோபல் தமிழ் செய்தி
Tuesday, June 29, 2010
வளர் இளம் பருவத்தினரின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வும்
மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.
இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல்லப் போகிறோம். மேலை நாட்டு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர் பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல் நலம், மனநலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நலப்போக்கு [integrated health perpective] அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆங்கில மருத்துவத்தில் நல வாழ்க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலான கேள்வியாக இருக்கிறது.
மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலும் மேலை மருத்து வத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையி லேயே அமைந் திருக்கின்ற காரணத்தினால் பெரும் செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படுகின்றன. பல பரிசோதனை ஆய்வுகள், கருவிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது. எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடிய மருத்துவம் மாற்று மருத்துவம்தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நல வாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.
வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத் து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக் கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்கு கின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப் படுத்த வேண்டும்.
ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டு வதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [Distanting or indifferent attitude] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக் கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்து கின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர் கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக் கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவ துண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக் கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும் போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.
எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய் யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தை களிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.
நம்மவர்களிடையே மனநல ஆலோ சனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவிலேயே பூரண மிக்க நலம் பெறலாம்.
இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல்லப் போகிறோம். மேலை நாட்டு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர் பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல் நலம், மனநலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நலப்போக்கு [integrated health perpective] அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆங்கில மருத்துவத்தில் நல வாழ்க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலான கேள்வியாக இருக்கிறது.
மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலும் மேலை மருத்து வத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையி லேயே அமைந் திருக்கின்ற காரணத்தினால் பெரும் செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படுகின்றன. பல பரிசோதனை ஆய்வுகள், கருவிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது. எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடிய மருத்துவம் மாற்று மருத்துவம்தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நல வாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.
வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத் து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக் கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்கு கின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப் படுத்த வேண்டும்.
ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டு வதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [Distanting or indifferent attitude] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக் கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்து கின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர் கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக் கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவ துண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக் கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும் போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.
எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய் யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தை களிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.
நம்மவர்களிடையே மனநல ஆலோ சனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவிலேயே பூரண மிக்க நலம் பெறலாம்.
தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும்
நல்ல சிந்தனைகளும், மன அமைதியுடன் பற்றுகளின்றி வாழ்பவர்களை ஆழ்ந்த தூக்கம் தழுவ ஆம்பிக்கும். இந்த தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும். மன அமைதியுடன் தூங்க மூளை நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.நரம்புகளைத் தூண்டும் காம எண்ணங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றால் தூக்கம் கெடும் வாய்ப்புண்டு. கசகசா, சீரகம், கொத்தமல்லி போன்றவையும், குறைந்த அளவு உணவு, நல்ல எண்ணங்கள், சிறு உடற்பயிற்சி, தியானம் போன்ற அமைதியான தூக்கத்தை அருகில் கொண்டு வருகின்றன.
அதற்கு பதில் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட தூக்கமுண்டாக்கி மருந்துகளை உட்கொள்வதால் பலஹீனம், சோர்வு, புத்துணர்ச்சியின்மை, ஞாபகமறதி மற்றும் பலவித மருந்தடிமைத்தன்மை ஏற்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும் அழகான மூலிகைதான் பாஸிபுளோரா. பாஸிபுளோரா இன்கார்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாஸிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பாஸிபுளோராவில் உள்ள ஏபிஜெனின், லுட்டியோலின், குர்சிட்டின், கேம்பரால், ஹார்மின், ஹார்மலின், ஹார்மால், ஹார்மலால் போன்ற வேதிச்சத்துக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையுடையவை.
குளோனிடின் என்னும் மருந்தைவிட சிறப்பு வாய்ந்தவை பாஸிபுளோரா பூக்கள். உண்பதற்கு சுவையான பாஸிபுளோரா பூக்களிலிருந்து ஜெல்லிகள், ஜாம் தயார் செய்யலாம். பாஸிபுளோரா பூக்களின் பூவிதழ் களை மட்டும் பிரித்து 35 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, 250 கிராம் சீனி சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவு படுக்கும்பொழுது 10 முதல் 15 மில்லியளவு நீருடன் கலந்து சாப்பிட தூக்கம் நன்கு உண்டாகும். மனகுழப்பம் நீங்க பாஸிபுளோரா பழம், பூ மற்றும் இலைகளை நன்கு உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியை 200 மிலி நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, இரவில் குடிக்கலாம். மலைப்பிரதேசங்களில் பாஸிபுளோரா கொடிகள் அழகுக்காக வேலியோரங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் பழங்களும் சுவையானவை. அவற்றையும் உட்கொள்ளலாம்.
அதற்கு பதில் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட தூக்கமுண்டாக்கி மருந்துகளை உட்கொள்வதால் பலஹீனம், சோர்வு, புத்துணர்ச்சியின்மை, ஞாபகமறதி மற்றும் பலவித மருந்தடிமைத்தன்மை ஏற்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும் அழகான மூலிகைதான் பாஸிபுளோரா. பாஸிபுளோரா இன்கார்னேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாஸிபுளோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பாஸிபுளோராவில் உள்ள ஏபிஜெனின், லுட்டியோலின், குர்சிட்டின், கேம்பரால், ஹார்மின், ஹார்மலின், ஹார்மால், ஹார்மலால் போன்ற வேதிச்சத்துக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மையுடையவை.
குளோனிடின் என்னும் மருந்தைவிட சிறப்பு வாய்ந்தவை பாஸிபுளோரா பூக்கள். உண்பதற்கு சுவையான பாஸிபுளோரா பூக்களிலிருந்து ஜெல்லிகள், ஜாம் தயார் செய்யலாம். பாஸிபுளோரா பூக்களின் பூவிதழ் களை மட்டும் பிரித்து 35 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, 250 கிராம் சீனி சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவு படுக்கும்பொழுது 10 முதல் 15 மில்லியளவு நீருடன் கலந்து சாப்பிட தூக்கம் நன்கு உண்டாகும். மனகுழப்பம் நீங்க பாஸிபுளோரா பழம், பூ மற்றும் இலைகளை நன்கு உலர்த்தி, பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியை 200 மிலி நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி, இரவில் குடிக்கலாம். மலைப்பிரதேசங்களில் பாஸிபுளோரா கொடிகள் அழகுக்காக வேலியோரங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் பழங்களும் சுவையானவை. அவற்றையும் உட்கொள்ளலாம்.
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு
நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள். எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார்.
பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம். இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும்.
இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும். தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது.
இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும். இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
//
function open_youtube(id){jacCreatForm('open_youtube',id,400,200,0,0,'Embed a YouTube Video',0,'Embed Video');}
பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம். இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும்.
இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும். தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது.
இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும். இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
//
function open_youtube(id){jacCreatForm('open_youtube',id,400,200,0,0,'Embed a YouTube Video',0,'Embed Video');}
சர்க்கரை நோய் – சில பரிமாணங்கள்
சர்க்கரை நோய் (Diabetes) பாதிப்பு அதிகரித்து வருவது (நகர்ப்புறத்தில் நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்தும், கிராமப் புறங்களில் சில மடங்கு அதிகரித்தும்) புள்ளி விபர ஆய்வுகள் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நோய் தடுப்பு முறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல், நோயை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டுபிடிப்பது; பின் அதற்காக என்ன செய்வது என சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தடுப்பு வழி முறைகளை கையாளுவதின் மூலம் கூடுதல், நிலைத்த பயன் கிட்டும் என்பது தெளிவு.
சர்க்கரை நோய் ஏற்பட பல விசயங்கள் (பரம்பரை, உடற்பயிற்சி / உழைப்பு குறைவு, அதிகரிக்கும் மன அழுத்தம், கிருமிகள், நச்சு வேதிப் பொருட்களின் பாதிப்பு, உணவு முறை மாற்றம்....) காரணமாக இருக்கும் பட்சத்தில் எதற்கு கூடுதல் / உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை முற்றிலுமாக தடுக்க / கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
உணவு முறை மாற்றம் - அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல உணவுப் பொருட்களை சாப்பிடும்போது கார்ப்போ ஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டும்தான் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அரிசி அல்லது மாவுச்சத்துப் பொருட்கள்தான் உணவில் பெரும்பாலான பங்கு வகிக்கிறது என்று ஆகிய பின்பு, அதை செரிக்க ‘இன்சுலின்” (Insulin) எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் செல்கள் பளு அதிகரித்து அவை விரைவில் இறந்து விடுவதால் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவில் ஏற்படுகிறது.
மேலும் பாரம்பரிய அரிசி வகைகளைக் காட்டிலும் (இவற்றில் மாவுச்சத்து தவிர புரதச் சத்தும் இருக்கத் தான் செய்கிறது) ‘பசுமைப் புரட்சி’யின் காரணமாக கொண்டு வரப்பட்ட புதுவகை அரிசி வகைகளை மட்டுமே அதிகம் உண்ணும் நிலை (இவற்றில் மாவுச் சத்து மிகமிக அதிகமாகவும், புரதத்தின் அளவு மிக, மிகக் குறைவாகவும் இருப்பதால்) ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை நோயின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுவாக உடலுழைப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு முன்பைக் காட்டிலும் அதிகமான பாதிப்பிற்கு மக்கள் உள்ளாவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வாழ்க்கை என்பது ஒருவர் அவருக்கான அடிப்படைத் தேவைகளை அவரே முன்வைத்து செயல்படுத்தும் வாய்ப்புகளை / சூழலை முடிந்த வரை ஏற்படுத்திக் கொடுத்தும் தவிர்க்க (முற்றிலு மாக) முடியாத தேவைகளை தொழிற்கூடங்களை / பிறவற்றை சார்ந்து இருக்குமாறு இருப்பது போய் இலாபம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் தொழிற்கூடங்கள், அதன் பிற அங்கங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த (குறிப்பாக ஏழை, எளிய மக்கள்) மக்கள் நலன்களை காப்பதற்கு பதில் தொழிற்கூடங்களின் நலன்களை மட்டுமே அதிகம் கவனத்தில் கொண்டு, அதிகாரம் படைத்தவர்களுக்கே நன்மை பயந்து வந்துள்ளது வரலாற்று உண்மையாக உள்ளது.
சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் 1. நோய்தடுப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல், நோய் வந்த பிறகு என்ன செய்வது என்பதை செயல்படுத்தும் திட்டங்களை மட்டும் ஊக்குவிப்பது 2. தனி மனிதன் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட / கட்டுப்படுத்த வேண்டிய வாய்ப்புகள் / சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், தொழிற்கூடங்கள் / வல்லுநர்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் போக்கே தென்படுகிறது.
ஆக உணவு முறை மாற்றம் (அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துதல்) பாரம்பரிய அரிசி வகைகளை பயன்பாட்டில் கொண்டுவருவது, உடலுழைப்பு / உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பது, அதிகரித்து வரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களுக்கான (குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான) சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் (அனைவருக்கும், நிலம் / வீடு, கல்வி, சுகாதாரம், வேலைக்கு உத்தரவாதம்... போன்றவை) ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் வழங்குதல் நடைமுறை படுத்தவேண்டும். அதற்காக பாரம்பரியம், கிருமிகள், நச்சுப்பொருட்களின் பங்கினை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. எந்த செயல்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தால் நீடித்த / நிலைத்த நோய் தடுப்பு / பாதுகாப்பு கண்கூடாகத் தெரியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
இந்நிலையில் நோய் தடுப்பு முறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல், நோயை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டுபிடிப்பது; பின் அதற்காக என்ன செய்வது என சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தடுப்பு வழி முறைகளை கையாளுவதின் மூலம் கூடுதல், நிலைத்த பயன் கிட்டும் என்பது தெளிவு.
சர்க்கரை நோய் ஏற்பட பல விசயங்கள் (பரம்பரை, உடற்பயிற்சி / உழைப்பு குறைவு, அதிகரிக்கும் மன அழுத்தம், கிருமிகள், நச்சு வேதிப் பொருட்களின் பாதிப்பு, உணவு முறை மாற்றம்....) காரணமாக இருக்கும் பட்சத்தில் எதற்கு கூடுதல் / உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதை முற்றிலுமாக தடுக்க / கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
உணவு முறை மாற்றம் - அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல உணவுப் பொருட்களை சாப்பிடும்போது கார்ப்போ ஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டும்தான் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் நிலை தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அரிசி அல்லது மாவுச்சத்துப் பொருட்கள்தான் உணவில் பெரும்பாலான பங்கு வகிக்கிறது என்று ஆகிய பின்பு, அதை செரிக்க ‘இன்சுலின்” (Insulin) எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் நிலை ஏற்பட்டு, பல வருடங்களுக்கு இந்நிலை தொடரும்போது இன்சுலினை சுரக்கும் செல்கள் பளு அதிகரித்து அவை விரைவில் இறந்து விடுவதால் சர்க்கரை நோய் பாதிப்பு விரைவில் ஏற்படுகிறது.
மேலும் பாரம்பரிய அரிசி வகைகளைக் காட்டிலும் (இவற்றில் மாவுச்சத்து தவிர புரதச் சத்தும் இருக்கத் தான் செய்கிறது) ‘பசுமைப் புரட்சி’யின் காரணமாக கொண்டு வரப்பட்ட புதுவகை அரிசி வகைகளை மட்டுமே அதிகம் உண்ணும் நிலை (இவற்றில் மாவுச் சத்து மிகமிக அதிகமாகவும், புரதத்தின் அளவு மிக, மிகக் குறைவாகவும் இருப்பதால்) ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை நோயின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுவாக உடலுழைப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு முன்பைக் காட்டிலும் அதிகமான பாதிப்பிற்கு மக்கள் உள்ளாவதற்கு இது முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வாழ்க்கை என்பது ஒருவர் அவருக்கான அடிப்படைத் தேவைகளை அவரே முன்வைத்து செயல்படுத்தும் வாய்ப்புகளை / சூழலை முடிந்த வரை ஏற்படுத்திக் கொடுத்தும் தவிர்க்க (முற்றிலு மாக) முடியாத தேவைகளை தொழிற்கூடங்களை / பிறவற்றை சார்ந்து இருக்குமாறு இருப்பது போய் இலாபம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் தொழிற்கூடங்கள், அதன் பிற அங்கங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த (குறிப்பாக ஏழை, எளிய மக்கள்) மக்கள் நலன்களை காப்பதற்கு பதில் தொழிற்கூடங்களின் நலன்களை மட்டுமே அதிகம் கவனத்தில் கொண்டு, அதிகாரம் படைத்தவர்களுக்கே நன்மை பயந்து வந்துள்ளது வரலாற்று உண்மையாக உள்ளது.
சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் 1. நோய்தடுப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல், நோய் வந்த பிறகு என்ன செய்வது என்பதை செயல்படுத்தும் திட்டங்களை மட்டும் ஊக்குவிப்பது 2. தனி மனிதன் நோயின் பாதிப்பிலிருந்து விடுபட / கட்டுப்படுத்த வேண்டிய வாய்ப்புகள் / சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், தொழிற்கூடங்கள் / வல்லுநர்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும் போக்கே தென்படுகிறது.
ஆக உணவு முறை மாற்றம் (அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்... போன்ற பல பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துதல்) பாரம்பரிய அரிசி வகைகளை பயன்பாட்டில் கொண்டுவருவது, உடலுழைப்பு / உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பது, அதிகரித்து வரும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களுக்கான (குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான) சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் (அனைவருக்கும், நிலம் / வீடு, கல்வி, சுகாதாரம், வேலைக்கு உத்தரவாதம்... போன்றவை) ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் வழங்குதல் நடைமுறை படுத்தவேண்டும். அதற்காக பாரம்பரியம், கிருமிகள், நச்சுப்பொருட்களின் பங்கினை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. எந்த செயல்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தால் நீடித்த / நிலைத்த நோய் தடுப்பு / பாதுகாப்பு கண்கூடாகத் தெரியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)